Friday, 23 November 2012

பிள்ளை மொழி

 மயிலாட முகிலொன்று மழையானது - உன் 
மழலைப்பேச்சில்  என் இதயம் தான் மெழுகானது.

மணிமாலை உன் பல்லானது 
விண்மீன் உன் விழியானது 
வானவில்லாய் வந்த என் வண்ணமே 
கவிதையாய் ஒலித்த  என் எண்ணமே - நீ 
பகலில் குளிர் தரும் வெண்ணிலவோ, இல்லை 
இரவில்  ஒளியாய்  மின்னும் சூரியனோ  - என் மயிலாட...

மென்மலரே உன் மெய்யானது 
செந்தேன் உந்தன் மொழியானது 
கற்பனையில் வளரும் சிறு காவியமே 
மடியில் தவழும் நிஜ ஓவியமே- என் 
விழியில் ததும்பும் கண்ணீர் துளியோ, அல்லது 
இதழில் மலர்ந்த என் புன்னகையோ - என் மயிலாட...

No comments:

Post a Comment