Tuesday, 27 November 2012

நில் கவனி இரசி

வேகமாய் ஓடும் இயந்திர உலகம் என்னை 
தன்பின் இழுத்துச்சென்றது 
கண்ணயர்ந்தால் ஆமைகளும் முந்திவிடுமோ என்ற 
அச்சம் என்னை விரட்டியது 
எண்களைத் தட்டமட்டுமே இன்று விரல்கள் பயன்படுகின்றன 
வீணைகள் வீட்டின் சுவற்றோடு சாய்ந்தன.
சுதந்திரமாய் சிறையில் வாழும் இயந்திர மனிதனானேன் 
என்னைச்சுற்றி உலகம் குறுகிவிட்டது 

ஆகையால் என்னை என்னிடமிருந்து  மீட்க நான் முனைந்தேன் 
என் சிந்தனைக்கு சிறகளிதேன்.
புதுமையின் இதயத்தில் சிற்றெறும்பாய்  நுழைந்தேன் 
பட்டாம்பூச்சியாய் மாறினேன் 
இசையின் நடுவே நூலாய்ப்புகுந்தேன் 
ராகமாய் ஒலிபெற்றேன் 
மழலையர் மத்தியில் சென்று வயதைத்துலைதேன் 
நானும் மாறினேன் குழந்தையாய் !

Sunday, 25 November 2012

அன்பென்னும் உணர்வு


நிலையில்லா உலகில் நிலைத்துவிட்ட அன்பே
உலகாம் மெய்க்கு உயிரான அன்பே
உயிருடன் கலந்த உணர்வும் அன்பே
உணர்வை வளர்க்கும் அன்பே அன்பே

Friday, 23 November 2012

அன்பு


மடை திறந்த காட்டருவி அன்பாய் மாறியது

உள்ளதை நனைத்து ஊமை மொழி பேசியது

பார்வையின் பரிமாற்றம் அங்கே காவியம் படைத்தது

'அன்பிற்கும் உண்டோ அட்டைக்குந்தாழ்'

பிள்ளை மொழி

 மயிலாட முகிலொன்று மழையானது - உன் 
மழலைப்பேச்சில்  என் இதயம் தான் மெழுகானது.

மணிமாலை உன் பல்லானது 
விண்மீன் உன் விழியானது 
வானவில்லாய் வந்த என் வண்ணமே 
கவிதையாய் ஒலித்த  என் எண்ணமே - நீ 
பகலில் குளிர் தரும் வெண்ணிலவோ, இல்லை 
இரவில்  ஒளியாய்  மின்னும் சூரியனோ  - என் மயிலாட...

மென்மலரே உன் மெய்யானது 
செந்தேன் உந்தன் மொழியானது 
கற்பனையில் வளரும் சிறு காவியமே 
மடியில் தவழும் நிஜ ஓவியமே- என் 
விழியில் ததும்பும் கண்ணீர் துளியோ, அல்லது 
இதழில் மலர்ந்த என் புன்னகையோ - என் மயிலாட...

Sunday, 18 November 2012

உன்னில் பாதியாய்

காற்றிலே க‌ல‌ந்து உன் வாய்மொழியாய்
வெளியேற‌ வ‌ர‌ம்த‌ருவாய்
நேற்றை ம‌ற‌ந்தேன் இன்றே பிற‌ந்தேன்
உன்னில் பாதியாய்

கால்‌கொண்டு ந‌ட‌ந்து வ‌ந்த‌ தென்ற‌ல்
புல்லின் த‌லைகோதி செல்வ‌து போல்
நீ ந‌ட‌ந்து வ‌ருவாய் என‌ உன் பாதையில்
நானும் புல்ல‌னேன்
க‌னிக்கூட்ட‌ம் உன் இத‌ழான‌தென்று நானும்
ப‌ழ‌ர‌ச‌ம் ப‌ருக‌ த‌வித்திருந்தேன்‍, உயிரே
நேற்றை ம‌ற‌ந்தேன் இன்றே பிற‌ந்தேன்
உன்னில் பாதியாய்

நீர்க்கொண்டு த‌வ‌ழ்ந்து வ‌ந்த‌ மேக‌ம்
ம‌ழையாய் ம‌ண்ணில் சேர்வ‌து போல்
உன் பாத‌ம் ப‌டுமென்று நீ வ‌ரும் பாதையில்
நானும் ம‌ண்ணானேன்
கார்மேக‌ம் உன் கூந்த‌லான‌தென்று நானும்
ம‌ழையில் ந‌னைய‌த்துடிக்கிறேன், க‌ன‌வே
நேற்றை ம‌ற‌ந்தேன் இன்றே பிற‌ந்தேன்
உன்னில் பாதியாய்

நாடு

நாடு என்பதில் நாட்டம் கொண்டிடு

நாளை உன்னை வாழவைக்கும் தெய்வம் போன்றது

வீடு என்பது அதன் அங்கமானது

நாடு உயர வீடு உயரும் நம்பி வாழ்ந்திடு


வீரர் தோன்றினர் நாட்டைக்காத்தனர்

தீரர் இங்கு செல்வமெல்லாம் செழிக்கச்செய்தனர்

வேதம் தன்னையே போற்றி வாழுவோம்

தெய்வ பாதம் வணங்கும் யாவருமே புனிதமானவர்


தேசம் என்பது தேவரூபமே

வாசம் புரியும் யாவரையும் வாழ வைத்திடும்

இம்மண்ணின் வாசமே வானை முட்டுமே

தேவரெல்லாம் வாழ்த்திடுவர் வணங்கும் யாரையும்.


தீபம் போன்றது தூய்மையானது

தவித்தவரின் தாகம் தீர்க்கும் கங்கையானது

மனிதநேயமே தம் வாழ்கை என்றனர்

படகையோட்டி பாசத்திற்கு விளக்கமளித்தனர்


இறைவன் காணவே கண்ணைத்தந்தனர்

இன்றளவும் இவர்கள் புகழ் பாடும் மண்ணிது

பாரத நாட்டினர் கடமையாற்றுவர்

புனிதர் வாழும் பூமியென்று பெருமைகொள்ளுவர்

விழியோர விண்மீன்கள்

இவற்றை கண்ணீர் என்று கூறி

கழுவேற்றி விடாதீர்கள்

வளர்ச்சிக்கு வழிகாட்டும் கலங்கரை

விளக்கங்கள் இவை