நெஞ்சிருந்தும் நினையாதவராய்
விழிஇருந்தும் நோக்காதவராய்
வாழும் மனிதர் கூட்டம்
உலக அரங்கில் ஒரு சிலரின் ஆட்டம்
செவி இருந்தும் கேளாதவராய்
உயரிருந்தும் நடைபிணமாய்
வாடும் பலரது தோற்றம்
இவர் உழைப்பில் சிலருக்கு ஏற்றம்
ஏழ்மைக்கு மேடையிட்டு அதில் பட்டினியை
அரங்கேற்றும் அவலங்களே இங்கு நடைமுறையாயின
சிலர் உருவற்று வலுவற்று வாழ்வற்று வாழும் இந்த
மண்ணின் மணம் - சிந்தியுங்கள் ஒரு கணம் !
விழிஇருந்தும் நோக்காதவராய்
வாழும் மனிதர் கூட்டம்
உலக அரங்கில் ஒரு சிலரின் ஆட்டம்
செவி இருந்தும் கேளாதவராய்
உயரிருந்தும் நடைபிணமாய்
வாடும் பலரது தோற்றம்
இவர் உழைப்பில் சிலருக்கு ஏற்றம்
ஏழ்மைக்கு மேடையிட்டு அதில் பட்டினியை
அரங்கேற்றும் அவலங்களே இங்கு நடைமுறையாயின
சிலர் உருவற்று வலுவற்று வாழ்வற்று வாழும் இந்த
மண்ணின் மணம் - சிந்தியுங்கள் ஒரு கணம் !