காற்றிலே கலந்து உன் வாய்மொழியாய்
வெளியேற வரம்தருவாய்
நேற்றை மறந்தேன் இன்றே பிறந்தேன்
உன்னில் பாதியாய்
கால்கொண்டு நடந்து வந்த தென்றல்
புல்லின் தலைகோதி செல்வது போல்
நீ நடந்து வருவாய் என உன் பாதையில்
நானும் புல்லனேன்
கனிக்கூட்டம் உன் இதழானதென்று நானும்
பழரசம் பருக தவித்திருந்தேன், உயிரே
நேற்றை மறந்தேன் இன்றே பிறந்தேன்
உன்னில் பாதியாய்
நீர்க்கொண்டு தவழ்ந்து வந்த மேகம்
மழையாய் மண்ணில் சேர்வது போல்
உன் பாதம் படுமென்று நீ வரும் பாதையில்
நானும் மண்ணானேன்
கார்மேகம் உன் கூந்தலானதென்று நானும்
மழையில் நனையத்துடிக்கிறேன், கனவே
நேற்றை மறந்தேன் இன்றே பிறந்தேன்
உன்னில் பாதியாய்
வெளியேற வரம்தருவாய்
நேற்றை மறந்தேன் இன்றே பிறந்தேன்
உன்னில் பாதியாய்
கால்கொண்டு நடந்து வந்த தென்றல்
புல்லின் தலைகோதி செல்வது போல்
நீ நடந்து வருவாய் என உன் பாதையில்
நானும் புல்லனேன்
கனிக்கூட்டம் உன் இதழானதென்று நானும்
பழரசம் பருக தவித்திருந்தேன், உயிரே
நேற்றை மறந்தேன் இன்றே பிறந்தேன்
உன்னில் பாதியாய்
நீர்க்கொண்டு தவழ்ந்து வந்த மேகம்
மழையாய் மண்ணில் சேர்வது போல்
உன் பாதம் படுமென்று நீ வரும் பாதையில்
நானும் மண்ணானேன்
கார்மேகம் உன் கூந்தலானதென்று நானும்
மழையில் நனையத்துடிக்கிறேன், கனவே
நேற்றை மறந்தேன் இன்றே பிறந்தேன்
உன்னில் பாதியாய்
No comments:
Post a Comment