Wednesday, 27 February 2019

அடிமைத்தனம்


சங்கிலியால் கட்டப்பட்டோம்,
பிணை பட்டகைதிகள் போல் நாங்கள்.
சிங்கமென காட்டை ஆள விழைந்தோம்
துண்டமாய் வெட்டப்பட்டோம்,





















ஆடித்திறிய ஏங்கித்தவித்தோம்,
ஆயினும், ஆட்டிப் படைக்கப் பட்டோம்.
தேடி உணர்ந்த ஞானம் வேண்டினோம்
வாட்டி வதைக்கப்பட்டோம்.

வேறில்லா மரங்களானோம்
விரும்பா வாழ்வு வேம்பாய் கசந்திட
உருமாறா ஊமைகள் பேசுவதெங்கே?
இரும்பால்  தைக்கப்பட்டோம்!

போதும் இந்த அவல நிலை!
திறந்தது மனம்,பிறந்தததொரு கேள்வி
நம்மைக் கட்டுண்டது இச்சங்கிலியா?
தெளிந்தது மனம் விரிந்தது வானம்...

                                                         - இப்படிக்கு ஊஞ்சல்