Sunday, 14 October 2018

இன்றைய ஆத்திச்சூடி


அடுத்ததை விடுத்தவன் எடுத்தது விளங்காது

ஆவினம் காப்பது வானினும் நன்று

இன்றை நுகர்ந்தால் நின்றதும் நகரும்

ஈன்றவை இழப்பின் சான்றவை இகழும்

உள்ளதை பகிர்ந்தால் நல்லவை நிகழும்

ஊக்கம் அழிந்தால் ஆக்கம் ஒடுங்கும்

எட்டா கனியை விட்டால் நன்று

ஏற்றம் வரினும் மாற்றம் கொள்ளீர்

ஐயம் கொண்டால் வையம் சுருங்கும்

ஒன்றை பற்றின் நன்றே நிகழும்

ஓர்மை விடுத்தின் நேர்மை விலகும்

ஔடதம் நீங்க மௌனம் நாடு

No comments:

Post a Comment