Wednesday, 23 July 2014

மௌனம் என்தன் வழியாகும்

கூர் வாள் என்தன் நாவானால்,
கனைகள் என்தன் சொல்லாகும்.
ஆன்பே என்தன் மூச்சானால்,
மௌனம் என்தன் வழியாகும்!

போர் வாள் என்தன் வாக்கானால்,
போரே  என்தன் வாழ்வாகும்.
கனிவே என்தன் நோக்கானால்,
மௌனம் என்தன் வழியாகும்!

மிரட்டல் என்தன் மொழியானால்,
மன்றம் என்தன் உலகாகும்.
நேசம் என்தன் நினைவானால்,
மௌனம் என்தன் வழியாகும்!


No comments:

Post a Comment