Sunday, 9 December 2012

மண்ணின் மணம்

நெஞ்சிருந்தும் நினையாதவராய்

விழிஇருந்தும் நோக்காதவராய்

வாழும் மனிதர் கூட்டம்

உலக அரங்கில் ஒரு சிலரின் ஆட்டம்

செவி இருந்தும் கேளாதவராய்

உயரிருந்தும் நடைபிணமாய்

வாடும் பலரது தோற்றம்

இவர் உழைப்பில் சிலருக்கு ஏற்றம்

ஏழ்மைக்கு மேடையிட்டு அதில் பட்டினியை

அரங்கேற்றும் அவலங்களே இங்கு நடைமுறையாயின

சிலர் உருவற்று வலுவற்று வாழ்வற்று வாழும் இந்த

மண்ணின் மணம் - சிந்தியுங்கள் ஒரு கணம் !

No comments:

Post a Comment