Monday, 16 March 2020

திருமூலர்

மாற்றான் உருவில் ஒளியாய் நின்று
திணறும் உலகை திசைகொண்டமைத்தாய்
உணர்வால் அடைந்த ஞானம் முதலாய்
யாவும் அளித்த திருமூலவரே!

அழியும் உலகை மதியால் உணர்ந்து
எழுத்தில் பாதிக்க உலகை நுகர்ந்தாய்
முனியாய்த்திகழ்ந்தாய் ஈசன் இசையால்
தனியாய்த்திரிந்தாய் தரைமீதினிலே!

உமையாள் உடனின்று பாங்காய் உரைக்க
சுமையோ வாழ்வது புவிமீதினிலே
இமைபோல் காக்கும் தாயவள் அருள
சமைப்போம் வளம்யாவையும் நாம் இனியே

ஈசன் குருவாய் துணை நின்றருள
ஆசான் அவனன்றி வேறொருளரோ
நாடும் அவனை உயிரும் உளவும்
தேடும் ஞானம் முழுமைப்பெறவே



Image result for thrumoolar

No comments:

Post a Comment